திருச்சி லோகநாதன்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

திருச்சி லோகநாதன் (Thiruchi Loganathan; 24 சூலை 1924 - 17 நவம்பர் 1989) தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.

திருச்சி லோகநாதன்
இயற்பெயர்திருச்சி லோகநாதன்
இயற்பெயர்திருச்சி லோகநாதன்
பிறப்பு(1924-07-24)24 சூலை 1924
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு17 நவம்பர் 1989(1989-11-17) (அகவை 65)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை (பின்னணிப் பாடகர்), இந்திய பாரம்பரிய இசை,
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1947–1986

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.

நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.

லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

திரைப்படங்களில்

தொகு

இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்

தொகு

பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்

தொகு
  1. பட்டினத்தார் (1962 திரைப்படம்)

குறிப்பிடத்தகுந்த இரண்டு நிகழ்வுகள்

தொகு
  • நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
  • சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல "மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க" என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர் டி. எம். செளந்தரராஜன் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. ஜகந்நாத், கே. (சனவரி 1951). ""ரத்னஜோடி" சி. டி. ராஜகாந்தம்". பேசும்படம்: பக். 118-126. 

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=திருச்சி_லோகநாதன்&oldid=3908561" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்