பொறையாறு

பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல்.

இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகுதி. [1]

இந்த ஊர் நெல்வளம் மிக்கது. [2]

ஒருகாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கிலிருந்த நல்ல நெல் விளையும் நிலத்தைக் கொண்ட கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் என்னும் புலவரின் குடும்பம் பசியால் வாடியபோது இந்த ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டது. [3]

அடிக்குறிப்பு

தொகு
  1. தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக்குருகு இறை கொள இருக்கும் நறவு மகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு அன்ன என் நற்றோள் - உலோச்சனார் பாடல் நற்றிணை 131
  2. ததைந்த புனலின் செழுநகர் வரைப்பு … வேலி ஆயிரம் விளைக நின் வயலே - கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
  3. வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பொறையாறு&oldid=902394" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்